வீட்டில் இருந்து காணாமல் போகும் சிவா மற்றும் சஹானா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்! விறுவிறுப்பாகும் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று பல மணி நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரும் பேசி சிரித்து கொண்டு இருக்கின்றனர். சிவா சஹானாவின் மேல் வைத்திருக்கும் காதலை அவரிடம் கூறுகிறார். அப்போது கோதண்டம் வந்து சிவாவை சஹானாவிடம் பேச விடாமல் தவிர்த்து கூட்டி சென்று விடுகிறார். தாட்சயினி சேது வானவராயனிடம் நடந்து கொண்ட விதம் தவறானது என்று கூறுகிறார். இதனால் சேதுவிற்கு கோபம் வந்து விடுகிறது.

மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அதிர்ச்சியில் மக்கள்!!

பின், தான் செய்த தவறுக்கு காரணம் ஐஸ்வர்யா தான் என்றும் அவர் இந்த வீட்டிற்கு வந்த நேரம் சரி இல்லை என்றும் கூறுகிறார். பின், தாட்சயினி அவரை திட்டி விட்டு சென்று விடுகிறார். ஐஸ்வர்யா சேதுவை கிண்டல் செய்து விட்டு சென்று விடுகிறார். சிவா மற்றும் சஹானா இருவரும் காலேஜ் சென்று ஹால் டிக்கெட் வாங்கி வருவதாக கூறி சென்று விடுகின்றனர்.

அவர்கள் வெகு நேரம் ஆகியும் வராததால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். பின், அவர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களை தேடுகின்றனர். அவர்கள் எங்கும் இல்லாததால் அனைவரும் பதட்டமடைந்து விடுகின்றனர். பின், காலையில் அவர்கள் இன்ஸ்பெக்டர் வெற்றியை தேடி செல்கின்றனர். அவர் தனக்கு தெரியாது என்று கூறி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சிவாவின் அப்பா மற்றும் பரட்டை இருவரும் சோகம் அடைந்து விடுகின்றனர். சிவா மற்றும் சஹானா இருவரும் எங்கு சென்று இருக்கிறார்கள்?? அவர்களுக்கு என்ன ஆனது?? என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here