கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானாவை வேண்டுமென்றே சேது அவமானப்படுத்துகிறார். சேது தாட்சயினியின் அரசியல் எதிரி வானவராயனை அடித்து விடுகிறார்.
“இதயத்தை திருடாதே” சீரியல்
இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் சேது மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அனைவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். ஐஸ்வர்யா சிவாவின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நினைக்கிறார். இதனால் கோபம் அடையும் சேது சென்று விடுகிறார். ஐஸ்வர்யாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. பின், அவர் மட்டும் சஹானா மற்றும் சிவா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். சிவா சேதுவை தனியாக அழைத்து தான் திருமணத்தில் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்கிறார்.
#RRvsKKR ஐபிஎல் போட்டி – தோல்வியில் இருந்து மீள போராடும் இரு அணிகள்!ஜெயிக்கப்போவது யார்??
சேதுவும் பழைய விஷயங்களை பேச வேண்டாம் என்று கூறி சிவாவை ஆச்சரியபடுத்துகிறார். பின், அவருக்கு சற்று நிம்மதியாக இருக்கின்றது. வீட்டில் இருந்து செல்லும் போது ஐஸ்வர்யா சிவாவின் சட்டையை எடுத்து கொள்கிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கண்கலங்கி விடுகின்றனர். பின், சிவா சேது நடந்து கொண்ட விதத்தினை பார்த்து விட்டு ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்துகின்றாரோ என்ற சந்தேகம் வருகிறது. அப்படி எதாவது செய்தால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்று சஹானாவிடம் கூறுகிறார். பின், சேது வீட்டில் சேது சிவாவின் சட்டையை எரிக்க பார்க்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தடுக்கும் ஐஸ்வர்யாவிடம் தன்னை ப்ரொபோஸ் செய்யுமாறு சேது கூறுகிறார். வேறு வழி இல்லாமல் அவரும் ப்ரொபோஸ் செய்து விடுகிறார். பின், சரி என்று சேதுவும் விட்டு விடுகிறார். பின், சேது, தாட்சயினி மற்றும் ஐஸ்வர்யா மூவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அன்னதானம் மற்றும் பூஜைகளை முடித்து விட்டு வரும் போது தாட்சயினியின் அரசியல் எதிரி வானவராயன் வந்து சண்டை போடுகிறார். அவர் சேதுவை பார்த்து “உனக்கு மொத உங்க அப்பா பெயர் தெரியுமா?” என்று கேட்டு விடுகிறார். இதனால் கோபம் அடையும் சேது அவரை அடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.