‘நீங்க செஞ்சத என்னால மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது’ – பவானியிடம் கொந்தளித்த சிவா!!

0

இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று நீலகண்டன் பவானியின் மேல் மிகவும் கோபத்துடன் இருக்கிறார். சேது ஐஸ்வர்யாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொடுமை செய்கிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று நீலகண்டன் பவானியின் மேல் மிகவும் கோபத்துடன் இருக்கிறார். அதே போல் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத நீலகண்டன் பவானியை அடித்து விடுகிறார். இப்படியாக இருக்க, சிவா தனியாக ஒரு கோவிலில் வந்து உட்கார்ந்து விடுகிறார். இதனால் சஹானா மிகவும் சோர்ந்து விடுகிறார்.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

பரட்டைக்கு போன் செய்து சிவாவை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்கிறார். பின், சேது தனது வீட்டில் ஐஸ்வர்யாவை கொடுமைபடுத்துகிறார். அடுத்து, சிவா இரவு போல வீட்டிற்கு வருகிறார். பவானி அவரிடம் பேசும் போது, சிவா மிகவும் கோபம் அடைத்து விடுகிறார். அதே போல் தன்னை தானே காயப்படுத்தி கொள்கிறார். இதனால் பவானி மற்றும் கோதண்டம் இருவருக்கும் என்னவோ போல் ஆகி விடுகிறது.

இனி தன்னிடம் பேச வேண்டாம் என்று சிவா கோபத்துடன் சொல்லி விட்டு செல்கிறார். சஹானா அவரை பலவாறாக சமாதானம் செய்கிறார். ஆனால், சிவாவால் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை. அதே போல் சேது சிவாவை கொல்வதற்காக ஆளை அனுப்பி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், ஐஸ்வர்யாவுடன் தனியாக வந்து நன்றாக பேசுகிறார். இதனால் ஐஸ்வர்யா குழப்பம் அடையும் போது, சேது தான் அப்படி எல்லாம் பேசுவேன் என்று எதிர்பார்க்காதே என்று கூறி சிரிக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா தன்னுடைய தாலி இருப்பதனால் தான் நீ உயிருடன் இருக்கிறாய் என்று கூறி விடுகிறார். பின், பாவனிடம் பேச நினைக்கிறார். அப்போது சிவா, பவானி செய்த காரியத்தினை தன்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று கூறி விட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here