பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தொற்று இறப்புகளை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை:
கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளை பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி 39 மருத்துவமனைகளில் உள்ள பிளாஸ்மா சிகிச்சை முறையினை ஆராய்ச்சி செய்து கூறப்பட்டுள்ளது. ஆராச்சியாளர்கள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்து இந்த சோதனைகள் மேற்கொண்டனர்.
அரியர் தேர்வுகள் ரத்தில் தமிழக அரசின் முடிவு தவறானது!!
39 மருத்துவமனைகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளிகளிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளில் 29 பேர் பொது மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள். மிதமாக நோய் அறிகுறிகள் காணப்பட்ட நோயாளிகள் 464 பேர் தோராயமாக பதிவு செய்யப்பட்டவர்களின் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனை முடிவுகள்:
இந்த ஆராய்ச்சிக்கான முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை எனப்படும் (ஐ.சி.எம்.ஆர்) வழங்கியது. அதில் கூறப்பட்டதாவது கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை பிளாஸ்மா சிகிச்சை குறைக்கவில்லை என்றும் அது சிகிச்சை திட்டங்களின் பின்னடைந்த திட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது.