இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
2 ஆம் இடத்திற்கு சென்ற தென்னாபிரிக்கா!
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்னும் தொடரை தொடங்கியது. இதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியதன் முதல் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் இம்முறை ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அதன் பின் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டிகளின் முடிவுகளின் படி தற்போது புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததன் மூலம் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.