2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் வழங்குவதில் புதிய முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. புள்ளிகள் வழங்குவதில் எளிமையான நடைமுறையை கடைபிடிப்பதற்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ICC விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி முடித்தது. இத்தொடர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனவால் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23ஆம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி பெற்றது. இந்நிலையில் 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் வழங்கும் முறையை ICC அறிவித்துள்ளது.
அந்த புதிய முறைப்படி, ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் 6 புள்ளிகளும், அப்போட்டி டிரா ஆனால் 4 புள்ளிகளும், டையில் முடிந்தால் 6 புள்ளிகளும் வழங்கப்படும் என ICC அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறுகிறதோ, அதற்குத் ஏற்றார்போல் புள்ளிகளை வழங்க ICC முடிவு செய்துள்ளது. ரசிகர்களும் ICCயின் இந்த அறிவிப்பை வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்