
சமீபத்தில் தான் ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடரை இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதன் பிறகு, அதிரடி மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக, தற்போது ஆடவர் ODI மற்றும் T20I போட்டிகளில் டிரெயில் அடிப்படையில் ஸ்டாப் கடிகாரத்தை ICC அறிமுகப்படுத்த உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தை கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில், பந்துவீசும் அணி அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் வீசத் தயாராக இல்லை என்றால், 2 முறை எச்சரிக்கை அளிக்கப்படும். ஆனால், 3வது முறையும் இது தொடர்ந்தால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், முதற்கட்டமாக வரும் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஆண்கள் ODI மற்றும் T20I கிரிக்கெட்டில் சோதனை அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பெண்களுக்கு இதில் இடம் உண்டு?? ஆளுநர் ஆர் என்.ரவி அதிரடி அறிவிப்பு!!