ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில், சிறந்த வீரரை தேர்வு செய்வதற்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மூன்று வீரர்களை உள்ளடங்கிய இந்த பட்டியலில், இந்திய வீரர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர். அதாவது, கடந்த மாதம் இந்திய அணியானது, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்ட சுப்மன் கில், ஓர் இரட்டை சதம், 2 சதம் உட்பட 643 ரன்களை குவித்ததன் மூலம், ஐசிசியின் “player of the month” பரிந்துரையில் இணைத்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி: கே எல் ராகுலின் இடம் என்ன?? அவரே வெளியிட்ட பதிவு இதோ!!
இவரை போல, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். இதன் மூலம், இவர் ஐசிசியின் பரிந்துரை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த பரிந்துரை பட்டியலில், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வேவும் ஐசிசியின் “player of the month” பரிந்துரையில் உள்ளார். இந்த மூவரில், யாருக்கு ஐசிசி “player of the month” விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.