ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால், ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் ஐ.சி.சி ஆடவர் உலகக்கோப்பை மற்றும் டி-20 போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அறிவிப்பின்படி 2027 மற்றும் 2031 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்குபெற்று, மொத்தம் 54 போட்டிகளாக நடத்தப்படும். மேலும் ஐ.சி.சி ஆடவர் டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் 20 அணிகள் இடம்பெறும். 2024, 2026, 2028 மற்றும் 2030 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் இந்த டி-20 கிரிக்கெட்டில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு ஐ.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழும் சமயத்தில் ஐ.சி.சி, சர்வதேச ஆடவர் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!