கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விருதிற்கு இந்திய வீரர்கள் மட்டுமே தேர்வாகி வந்த நிலையில் தற்போது முதன்முறையாக பாகிஸ்தான் அணி வீரர் தேர்வாகியுள்ளார்.
ஐசிசி சிறந்த வீரர்:
கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்கு வகையில் ஐசிசி புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதன்படி ஒரு மாதத்தில் எந்த வீரர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ அவர்கள் அந்த மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த விருது கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி ஜனவரி மாதத்திற்கு இந்திய அணியின் ரிஷாப் பாண்ட், பிப்ரவரி மாதத்திற்கு அஸ்வின், மார்ச் மாதத்திற்கு புவனேஷ்வர் தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இந்திய அணியினர் மட்டுமே சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சங்கிலியை தகர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த வயசுலயே அப்படி இருக்கீங்களே வனிதா – வைரலாகும் குழந்தை புகைப்படம்!!
இவர் கடந்த மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் முதல் இடத்திலும் டி 20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.