யூத் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர்கள் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
IBA யூத் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:
ஸ்பெயினின் லா நுசியாவில் சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பாக, யூத் உலக சாம்பியன்ஷிப் தொடர் கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரில், இந்தியா சார்பாக விஸ்வநாத் சுரேஷ், வன்ஷாஜ், ஆஷிஷ், தேவிகா, ரவினா கீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், ஆண்களுக்கான 48 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் சென்னையை சேர்ந்த விஸ்வநாத் சுரேஷ் பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவரை தொடர்ந்து, பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் தேவிகா தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த பிரிவில் வன்ஷாஜ்வும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விலகல்?? மாற்று வீரரை தேர்வு செய்த பிசிசிஐ ??
இந்த தொடரின், பெண்களுக்கான 48 கிலோ பிரிவில், பவுனா ஷர்மா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், ஆண்களுக்கான 54 கிலோ எடை பிரிவில் ஆஷிஷ் ஜப்பான் வீரரிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், இந்தியா 11 பதக்கங்களுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 10, அயர்லாந்து மற்றும் கஜகஸ்தான் தலா 7 பதக்கங்களை வென்று அடுத்த இடங்களில் உள்ளனர்.