இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியிடையே ஏற்படும் சச்சரவுகள் காரணமாக பல்வேறு விதமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறி, டெல்லி குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், 2005ஆம் ஆண்டு முதல் தனித்து வாழ்வது உறுதியாகிறது. தாம்பத்திய உறவு, மன அமைதியை இழந்த கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கலாம். இதன்மூலம் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கருத முடியாது. அதேபோல் கணவர் எந்த கொடூர செயலும் செய்ததாக தெரியவில்லை. மனைவியாலும் எதையும் நிரூபிக்க முடியவில்லை. எனவே விவாகரத்து அளித்தது சரியானதே.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி வரை விடுமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா!!!