என்னத்தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?? சந்தேக புத்தியால் கணவன் செய்த விபரீத காரியம்!!!

0

மனைவியின் மீது உள்ள சந்தேகத்தால் தன் மனைவி, நண்பர், நண்பரின் மகன் என அனைவரின் மீதும் ஆசிட் ஊற்றிய கோர சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

ரவி மற்றும் மாலா, இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். ரவிக்கு, சூசை என்ற நண்பர் இருந்துள்ளார். சூசை ரவியிடமும், ரவியின் குடும்ப உறுப்பினர்களிடமும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நெருங்கி பழகிவந்துள்ளார்.

சமீபத்தில் ரவியின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கு தேவையான பண உதவிகளையும் சூசை செய்துள்ளார். இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி ரவியின் மனைவியும் சூசையும் ரவியின் வீட்டில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரவி அவர்கள் பேசுவதை கேட்டு ஆத்திரம் அடைந்து வண்டிகளுக்கு வர்ணம் பூச உபயோகிக்கப்படும் ஆசிட்டை, சூசை மற்றும் மாலா முகத்தில் வீசியுள்ளார்.

அப்போது ரவியின் வீட்டிற்கு வந்த சூசையின் மகன் கெர்பின் மீதும் ரவி ஆசிட்டை ஊற்றியுள்ளார். தற்போது ரவியின் மனைவி, சூசை, சூசையின் மகன் மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here