ஹெலிஹாப்டரில் தொங்கிய மனித உடல் – ஆப்கானில் நடக்கும் கொடூரம்!!!

0

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகின்றது. அவர்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து அந்தந்த நாட்டு மக்கள் அனைவரையும் அந்தந்த நாட்டு அரசு தங்களது நாட்டிற்கு அழைத்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்கா அரசு அவர்களது நாட்டு மக்கள் அனைவரையும் தங்களது நாட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். அதே போலவே அமெரிக்க வீரர்களும் வெளியேறி விட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க படை வீரர்கள் தற்போது அவர்களது பிளாக் ஹாவ்க் ஹெலிஹாப்டரை விட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஹெலிஹாப்டரை தாலிபான்கள் இயக்கி பார்த்து இருக்கிறார்கள். அந்த ஹெலிஹாப்டரின் கீழ் மனித உடல் ஒன்று தொங்கி கொண்டு இருந்திருக்கிறது. அதனையும் சேர்த்து தான் இவர்கள் அந்த ஹெலிஹாப்டரை இயக்கி இருந்திருக்கின்றனர். இதனை பார்த்து விட்டு மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விட்டனராம். நாளுக்கு நாள் இவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது என்றும் கூறுகின்றனர்.கூடுதலாக, தாலிபான்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இது தங்களது ஹெலிஹாப்டர் என்றும் பதிவிட்டு இருக்கின்றனர். ஆனால், இவர்களது ட்விட்டர் கணக்கினை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here