குளிர் காலம் வந்தாலே நமது உடலில் சளி, இருமல், தும்மல் போன்றவையும் தொற்றி கொள்கிறது. என்ன தான் மருத்துவரை அணுகினாலும் அது தற்காலிக தீர்வாக தான் இருக்கும். எனவே எளிய முறையில் வீட்டிலேயே இருமல் மற்றும் சளியை குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
இருமல், சளி நீங்க??
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் நமக்கு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே தான் மழைக்காலங்களில் நமக்கு சளி, ஜலதோஷம் போன்றவையும் எளிதில் ஏற்படுகிறது. இதற்கு வீட்டு வைத்தியங்களும் செய்து குணப்படுத்தலாம்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு முதலில் படிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். படிகாரம் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க கூடியவை. முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் படிகாரத்தை வைத்து உருக்க வேண்டும். தோசைக்கல்லில் வைத்தே இந்த படிகாரத்தை தூளாக்க வேண்டும்.
இந்த 3 சொட்டு போதும் உங்க முகத்தை பளபளப்பாக மாற்ற – தவறாம படிங்க!!
இந்த படிகார தூளை 1 தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து இரவு தூங்க செல்லும் முன் சாப்பிட வேண்டும். பெரியவர்களுக்கு அரை தேக்கரண்டி போதுமானது. இதனை சாப்பிட்டு வந்தால் இருமல், ஜலதோஷம், சளி என அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
மற்றொரு முறையாக 3 வெற்றிலை, இஞ்சி சிறிது, 10 மிளகு எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதாக நறுக்கிய வெற்றிலை, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம், சளி இருமல் போன்றவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.