நமது உடலில் கை மற்றும் கால் முட்டிகள் அல்லது இடுப்பு போன்ற உடல் பகுதிகளில் வெயில் மற்றும் சில காரணங்களால் கருமை நிறம் தோன்றும். அதனை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் பாப்போம்.
கருமை நிறத்தை மாற்ற..!
நாம் ஆரஞ்சு பழத்தை உண்ட பிறகு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய்யை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும் இது போன்ற எளிய இயற்கை முறைகளை பயன்படுத்தி நாமும் பயன்பெறலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |