குழந்தைகள் என்ன தான் சத்தான உணவுகள் கொடுத்தாலும் அதனை விரும்புவதில்லை. சுவை அதிகம் உள்ள உணவுகளையே விரும்புகின்றனர். அதிக சத்துகள் உள்ள பன்னீரை வைத்து சுவையாக பெப்பர் பன்னீர் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
சோளமாவு – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிது
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரில் உப்பு மிளகுத்தூள் மற்றும் சோளமாவு சேர்த்து பிரட்டி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, பூண்டு, சீரகம். வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு வற்றியதும் எண்ணெய் பிரிந்து மேலே வரும் அப்பொழுது நாம் பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து 10 நிமிடங்கள் அடிபிடிக்காமல் வதக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பன்னீர் பெப்பர் ப்ரை தயார்.