தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை, தக்காளி, எலுமிச்சை, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு – தேவையான அளவு, பூண்டு – 3 பற்கள், சீரகம் – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை.
செய்முறை
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும். பிறகு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும் . பிறகு தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவேண்டும். நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கவும். ஆரோக்கியமான, சுவையான முருங்கைக்கீரை ரசம் தயார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |