இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை பெரிதும் பாதித்து வருகிறது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருக்கிறது, அதுமட்டுமல்லாமல் கொரோனா மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் மக்களுக்கு எளிதில் சென்று அடைவதில்லை, இவற்றை மக்கள் எளிதில் பயன்படுத்த புதிய வழிமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி ?
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசியல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது மேலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது மக்கள் தங்களது பகுதியில் தடுப்பூசியின் ஸ்லாட் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதில் அறிந்து கொள்ள புதிய முயற்சியை எடுத்துள்ளது. வாட்ஸ்அப்பில் இருந்து 9013151515 என்ற எண்ணுக்கு தங்களது அஞ்சல் குறியீட்டை அனுப்பினால் உங்களது பகுதியில் உள்ள ஸ்லாட் விவரங்கள் குறுஞ்செய்தியாக வரும் அந்த மெசஜில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கும் அதன் மூலம் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள எளிய முறையில் பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் போலியான மருந்துகளை பயன்படுத்தாமல் அரசு மூலம் பயன்படுத்தவும் இந்த வழிமுறையை கொண்டுவள்ளது.