திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சிலருக்கு அவர்களின் ஜாதக ரீதியாக தோஷங்கள் இருப்பதால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு கொண்டே இருக்கும். இதற்கு சில பரிகாரங்கள் உள்ளன.
திருமண தடை நீங்க…
திருமண தடை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காலசர்ப்ப தோஷம் அல்லது செவ்வாய் தோஷமாக இருக்கலாம். சிலருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் தாமதமாகலாம். சிலருக்கு எந்த வரனும் திருப்தியாக அமையாது.
இப்படி திருமண தடைக்கு 1000 காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நமது ஜாதகத்தில் 7ஆம் இடத்தை பொருத்தும் திருமணம் தாமதமாகலாம். இந்த திருமணத் தடையை நீக்கி எளிதில் வரன் அமைய சில பரிகாரங்கள் உள்ளன.
பரிகாரங்கள்:
திருமணம் நடக்க வேண்டி முருகனின் காலடியிலேயே சரணடைய வேண்டும். முருகனின் மீது முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும். செவ்வாய் கிழமை தான் முருகனுக்கு உகந்த நாள். அந்நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தை வாங்கி உள்ளங்கையில் வைத்து உங்கள் வேண்டுதலை நினைத்து முருகன் காலடியில் வைக்குமாறு சொல்லவும். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வந்தால் உங்களுக்கு விருப்பமான வரன் அமையும்.
இந்த பரிகாரத்தை உங்களுக்காக வேண்டி உங்கள் தாய், தந்தை, சகோதரிகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று 6 வாரங்கள் தொடர்ந்து முருகனை வேண்டி அவரின் சன்னதியை வலம் வந்தால் திருமண யோகம் கூடிவரும்.