முக அழகை பராமரிக்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு கிரீம்களை கூட பயன்படுத்த முடியாது. சிலருக்கு அது சேராமல் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். இப்பொழுது அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில் முகப்பொலிவை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பாப்போம்.
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய்
- தயிர்
- மஞ்சள்
- ஓட்ஸ்
- பேக்கிங் சோடா
- ரோஸ் வாட்டர்
- அரிசி மாவு
- எலுமிச்சை
- வேப்பிலை
வழிமுறைகள்
- முதலில் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் தயிர் மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்திற்கு குளிர்ச்சியை அளித்து நீர்சத்துக்களை அதிகரிக்கும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
- பேக்கிங் சோடா, அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் இதனை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
- அதன்பின் வேப்பிலையை அரைத்து தன்னுடன் தேன் மற்றும் எலுமிச்சையை கலந்து முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்பொழுது முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி இருக்கும்.
- அடுத்ததாக ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். ஓட்ஸ் முகத்திற்கு ஊட்டத்தை அளிப்பதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது.
இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர வேண்டும். இதனால் முகத்தில் பொலிவை பெறுவதோடு பருவால் ஏற்பட்ட தழும்புகளும் முழுமையாக நீங்கும். மாசுமருவற்ற சருமம் கிடைக்கும். இதனை செய்துவரும் போது கண்டிப்பாக எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட கூடாது.