எதிர்மறை எண்ணங்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா?? ஆன்மீக பரிகாரங்கள்!!

0
negative-thinking

சமுதாயத்தில் உள்ள பாதி பேருக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ளன. மேலும் சிலர் சாஸ்திரம், சம்பிரதாயம் என்ற பேரில் சிலரை அதிர்ஷ்டம் கெட்டவன், துரதிஷ்டசாலி என்று தூற்றுவதும் உண்டு. இவ்வாறு நாம் எதிர்மறை எண்ணங்களையும், அதிர்ஷ்டசாலியாக மாறவும் சில பரிகாரங்கள் உள்ளன. அதனை இந்த பதிவில் காணலாம்.

ஆன்மீக பரிகாரங்கள்

இந்த எதிர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போகிறது. மேலும் ஒருவரை குறை கூறியே அவர்களை இந்த சமுதாயம் தாழ்வு மனப்பான்மை அடையும் அளவிற்கு மாற்றி விடுகிறது. மேலும் பலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலையும் செய்து கொள்வதுண்டு. ஒருவர் சாதிக்க நினைத்தால் கூட அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என குறை கூறியே அவர்களை முன்னேற விடாமல் தடுத்து விடுகின்றனர்.

bathing
bathing

இப்பொழுது நமது எதிர்மறை எண்ணங்கள் விலக, புத்துணர்ச்சியோடு இருக்க வருடத்திற்கு 3 முறை இவ்வாறு குளித்தால் போதுமானது. இந்த குளியல் பரிகாரங்கள் மூலம் உங்கள் வாழ்கையில் எதிர்மறை எண்ணங்களை விட்டு தள்ளி செல்லலாம். நாம் அனைவர்க்கும் தெரிந்த பூ அரளி தான். இதனை அம்மனுக்கு சாற்றுவது உண்டு.

இதை நாம் குளிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் விட்டுவிட்டு அதன் பிறகு அந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். 11 கப் தண்ணீரை தலைக்கு ஊற்ற வேண்டும். முடிந்த வரை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டும். வருடத்திற்கு மூன்று முறை ஏதேனும் ஒரு சனிக் கிழமையில் குளிக்க வேண்டும். இதனால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here