இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அறிவுரை வழங்கியுள்ளார்.
IND VS AUS
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் 9 ஆம் தேதி இந்திய மண்ணில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முடிவில் எந்த அணி ICC யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது முடிவாகிவிடும். இதனால் இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் மைதானம் சரியில்லை என்று தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 19 வருடங்கள் ஆகியும் தற்போது வரை டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. இதனால் இந்த வருடம் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS: சென்னையில் ஒரு நாள் போட்டி…, புதிய மாற்றங்களுடன் சேப்பாக்கம்!!
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் இந்திய வீரர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து ஆட வேண்டும். மேலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான போட்டியை வெளிப்படுத்தினால் மட்டுமே டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என அறிவுரைகள் வழங்கியுள்ளார்.