கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனி உணவகங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குஜராத் ஹோட்டல் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபர் – நூதன தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!
தடுப்பூசி முக்கியம்:
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாம் அலை சற்று குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய, மாநில அரசின் தீவிர தடுப்பூசி செலுத்துதல் கொள்கையே ஆகும். இதுவரை உலக அளவில் கோவாக்சின், ஸ்பைஸர், கோவிஷில்டு, ஸ்புட்னிக் வி மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தில் உள்ள ஓட்டல்களில் இனி தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை குஜராத் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி மற்றும் அவரது சங்க நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கதாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்