கோவையில் மருத்துவமனை முதல்வர் செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி !!!
கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் அவர்கள் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கண்ணீர் விட்டு நன்றி கூறியது பார்ப்பவர்களையும் கலங்க செய்தது. செவிலியர்களை நோக்கி அவர் நீங்கள் தான் இந்த சூழ்நிலையில் கடவுள் என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் நடந்தேறியுள்ளது.