பட்டு போன்ற கூந்தல் நம் அனைவரின் விருப்பம் என்று கூட சொல்லலாம். ஆனால், நம் வாழ்வியல் சுழ்நிலை மற்றும் நம் வேலைகளால் நாம் நம் கூந்தலை கவனிப்பது இல்லை. அதிலும், பொடுகு தொல்லை நம் அனைவரையும் கவலைக்கு ஆழ்த்தும்.
அதனில் இருந்து வெளிவர வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஈஸியாக ஒரு பேக் செய்து அதனை பின்பற்றி வந்தால், பொடுகு தோலை நீங்கி விடும். அது இதோ..
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
- எலுமிச்சை – அரை பழம்
செய்முறை:
- முதலில் தேங்காய் எண்ணெய்யை சட்டியில் போட்டு காய வைக்கவும். சம பங்கு எலுமிச்சை சாறை எடுத்து இதில் ஊற்றவும்.
- பின் இந்த கலவை அறிய பின் உங்கள் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்க்கவும். நன்றாக மசாஜ் செய்யவும்.
- சிறிது நேரத்தில் உங்கள் முடியை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசவும்.
- இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உங்கள் பொடுகு பிரச்னை தீர்ந்து விடும்.
பயன்கள்:
தேங்காய் எண்ணை கூந்தலில் உள்ள வறட்சி தன்மையை போக்க வல்லது. தேங்காய் எண்ணை ;உங்கள் உடலில் உள்ள அதீத சூட்டை தணிக்கும். எலுமிச்சை உங்கள் கூந்தலில் உள்ள பொடுகுகளை போக்கி முடியை போஷாக்காக வைக்க உதவுகிறது.