நம்மில் பல ஆண்கள்,பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரும் முடி உதிர்வு, அடர்த்தியின்மை, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதி பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் வகையில் சூப்பரான ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை பொடி – 1 டீஸ்பூன்
- வெந்தய பொடி – 1 டீஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 1 டீஸ்பூன்
- கருஞ்சிரகப் பொடி – 1 டீஸ்பூன்
- கடுகு எண்ணெய் – 250 கிராம்
செய்முறை விளக்கம்;
இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் இந்த ஹேர் ஆயிலை ரெடி செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கறிவேப்பிலை பொடி, வெந்தயப் பொடி, நெல்லிக்காய் பொடி, கருஞ்சிரக பொடி ஆகியவற்றை வாங்கி கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து 250 கிராம் கடுகு எண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
பிறகு இதில் நாம் வாங்கி வைத்துள்ள பொடிகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும். மேலும் ஒரு 15 நிமிடங்கள் இந்த எண்ணெயை கொதிக்க வைத்து பிறகு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது இந்த எண்ணெய்யை சல்லடை வைத்து சலித்து ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும். இந்த ஹேர் ஆயிலை தினமும் நம் தலைமுடியில் தேய்த்து வருவதன் மூலம் நம் கூந்தல் அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.