தொடர் கனமழையால் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
தொடர் கனமழையால் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
தொடர் கனமழையால் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான இலங்கை கடற்கரையில் நிலை கொண்டுள்ளது. மேலும் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் கனமழை பெய்யவுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்ட்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.02.2023) – முழு விவரம் உள்ளே!!

இதனால் இன்று (02.02.2023) நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாகை கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here