
சிவகங்கை மாவட்டம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பூலாங்குறிச்சி V. S. S. அரசுக் கலை கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு துறை சார்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் BA Lecturer என தமிழ் மற்றும் வரலாறு துறை மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் பேராசிரியர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்களை மட்டும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தனர். இதனால் மாணவர்களை விடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு துறை சார்ந்த மாணவர்களும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(18.03.2023)-முழு விவரம் உள்ளே!!!
இந்த மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் முத்துசாமி பேச்சுவார்த்தையில் நடத்தியதில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 21ம் தேதி வரை V. S. S. அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.