Friday, April 19, 2024

போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கும் தீபிகா படுகோனே – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு விசாரணையில் போதைப்பொருள் தொடர்பு கண்டறியப்பட்டதை அடுத்து பல பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிக்கி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சுஷாந்த் வழக்கில் திருப்பம்:

கடந்த ஜூலை மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். அவரது வழக்கினை தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. பல பாலிவுட் பிரபலங்கள் போதை பொருளை பயன்படுத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. தற்போது வரை சுஷாந்த் காதலி ரியா அவரது தோழிகளான ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாரா அலி கான் ஆகியவர்களை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rhea and deepika
rhea and deepika

அதனால் அவர்கள் விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சர்ச்சையில் தீபிகா படுகோனே பெயரும் சிக்கி உள்ளது. தீபிகா படுகோனின் மேலாளராக பணிபுரியும் கரிஷ்மா என்பவர் அவருக்கு போதை பொருள் சப்ளை செய்துள்ளார் என்று அவர்கள் பேசிய வாட்ஸ்ஆப் உரையாடலில் தெரிய வந்துள்ளது.

மேலாளருக்கு சம்மன்:

இது தொடர்பாக அவரது மேலாளருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்ததாக தீபிகா படுகோனே விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்மன் NCB (Narcotics Control Bureau) சார்பாக அனுப்பப்படுகிறது. இதில் அடுத்ததாக நடிகை ஷ்ரேதா கபூர் சிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

ஹிந்தி தெரியாததால் வங்கியில் கடன் தர மறுப்பு – மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!!

deepika with her manager karishma
deepika with her manager karishma

ஏனென்றால் அவர் சுஷாந்த் மற்றும் ரியா ஆகியோருடன் அடிக்கடி ஒரு தீவிற்கு சென்றுள்ளார். அவர்கள் அங்கு போதைப் பொருள் பயன்படுத்துவதற்க்கான வாய்ப்புகள் இருந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். சுஷாந்த் வழக்கில் பல திருப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -