
கடந்த வருடம் கர்நாடகாவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஹிஜாப் அணிய அனுமதி என கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியது. இப்படி இருக்கையில் நியமன அரசு போட்டி தேர்வில் தலையை மூடியவாறு தலைப்பாகை, ஹிஜாப்கள் அணிய தடை என்ற அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாம். இந்நிலையில் ஹிஜாப் அணிய அரசு கொடுத்திருந்த ஒப்புதலை தேர்வாணையம் மீறுவதாக கூறி பல முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மீண்டும் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.