வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – இளைஞர்களுக்கு வலைவீச்சு
கன மழை மற்றும் வெள்ள அபாயம்:
அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள டவ்தே புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் விளைவாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை தொடரும், மேலும் நீலகிரி, கோவை, தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
டவ்தே புயலால் கன்னியாகுமரியில் உள்ள ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாகலாம் என்பதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மற்றுமாறு நீர் வள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.மேலும் இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அணைகளின் நீர் மட்டங்களை கண்காணித்து வருமாறு உத்தரவிட்டார். அதோடு கரை திரும்பாத படகுகள், கரை திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.