மஞ்சள் அலெர்ட்.. தொடர் மழையால் நீரில் மிதக்கும் மாநிலம் – முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0

கடந்த மாதம் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து கேரளாவில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கேரளாவில் 2 மாவட்டங்களை தவிர இதர அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை மஞ்சள் அலர்ட் போடப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் மஞ்சள் அலர்ட்:

தென்மேற்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை நம் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இனி வரும் நாட்களில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் கனமழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.

இதனால் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் தவிர இதர அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அடுத்த வாரமும் இந்த் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here