அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!!

0

வங்கக்கடலில் “புரெவி” புயல் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று தமிழ்நாட்டின் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

“புரெவி” புயல்:

கடந்த மாதம் 29 ஆம் தேதி வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “புரெவி” புயலாக உருவாகியது. இந்த புயல் ராமநாதபுரத்தில் தென்மேற்கு பகுதியில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பன் பாலத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இப்படியான நிலையில் இந்த புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் நிலை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இது குறித்து தமிழகத்தின் வெதர்மேன் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார்.

17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

அவர் தெரிவித்துள்ளதாவது, “வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று முழுவதும் நகர வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நல்ல கனமழை பெய்யும். சில இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று கனமழை வெளுத்து வாங்கும். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்னும் மழை பெய்ய ஆரம்பிக்கவில்லை, சிறிது நேரம் கழித்து கனமழை பெய்யும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here