கடந்த மாதம் முழுவதும் தமிழகத்தில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய சில நாட்களாக மழை பொழிந்து, மக்களுக்கு வெயிலை தனித்து குளிரூட்ட தொடங்கியுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, இனி வரும் நாட்களில் அக்னி வெயில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஏற்றாற்போல, பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வெயிலை தனித்து குளிரூட்டும் விதமாக மாலை முதல் தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழையும் பொழிந்து வருகிறது. இந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை வாசிகளே குட் நியூஸ்.., 75 இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணி தீவிரம்!!
அதாவது, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், அரியலூர், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.