மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை.., கொண்டாட்டத்தில் பொதுமக்கள்!!

0

தமிழகத்தில் குளிர்காலம் முடிவடைந்து கோடைகாலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வானிலை மாற்றத்தால், இந்த சில மாவட்டங்களில் வெயில், மழை என மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை.,, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை!!

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

மேலும் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்திருந்தனர். இப்படி இருக்க இப்பொழுது மதுரையில் 6 மணியளவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள், குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here