5 ஆம் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூர ஆசிரியர்.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
5 ஆம் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூர ஆசிரியர்.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
5 ஆம் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூர ஆசிரியர்.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன், கலைத்திறன் போன்றவற்றை வளர்க்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் அறியாமையை பயன்படுத்தி சுய காரியத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி பாலக்கரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் 35 பேர் படித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மாணவனின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவனிடம் டாக்டர் விசாரித்த போது பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்தது என கூறியுள்ளார்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு.,புதிய வங்கி கணக்கு குறித்து முக்கிய உத்தரவு!!

இதைக் கேட்ட மாணவனின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மனுவை பரிசீலித்த ஆட்சியர் கல்வி அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் விசாரித்த போது தலைமை ஆசிரியை கீதாராணி தான் கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார் என தெரிய வந்தது. பின்னர் மாணவனின் தாயார் தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட கீதா ராணி தலைமறைவானதால் போலீஸ் தேடி வருகிறது. கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here