சிறப்பாக பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசளிக்க HCL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது HCL ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் கூட தன் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க பல திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதுவும் ஐடி நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை வழங்குவதில் கில்லாடிகள். தற்போது மிக பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்று ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது HCL நிறுவனம் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் காரை அளிக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக பதவி ஏற்றுள்ள ரோஷினி நாடார் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஊழியர்களுக்குப் பென்ஸ் கார் அளிக்கும் திட்டத்தைக் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி அனைத்து HCL ஊழியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டும் அந்நிறுவனம் மிக சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு 50 பேருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்தது. தற்பொழுது மீண்டும் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைக்க பென்ஸ் கார் வழங்கும் திட்டத்திற்கு நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்