ஹரியானா மாநிலத்தில் மந்திரவாதி பேச்சைக் கேட்டு 5 குழந்தைகளைக் கொன்ற தந்தை அதிர்ச்சி சம்பவம்.
ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்..!
ஹரியானா மாநிலம் ஜிந்த் கிராமத்தை சேர்ந்தவர் ஜும்மா. இவர் கடந்த ஜூலை 15ம் தேதி இரண்டு மகள்கள் காணாமல் போனதாக தனது மனைவியுடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் ஜூலை 20ம் தேதி இரண்டு சிறுமிகளின் உடல்கள் ஹன்சி – புட்டானா கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி பஞ்சாயத்து அமைத்து விசாரித்ததில் தந்தையே தனது 5 குழந்தைகளையும் கடந்த 5 வருடத்தில் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சர்ச்சை யூ ட்யூபர் மாரிதாஸ் மீது புகார் – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!
தனது 5 குழைந்தைகளையும் கொன்று விட்டால் வீட்டில் வறுமை தீர்ந்து விடும் என்று ஒரு மந்திரவாதி சொன்னதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார். மந்திரவாதி பேச்சை நம்பி முதலில் தனது மகனை கொலை செய்துள்ளார். அதன் பிறகு ஒரு மகன் , மகள் இருவரையும் கொலை செய்துள்ளார். அதை யாரும் கண்டுகொள்ளாததால் தற்போது கடைசியாக இருந்த தனது இரு மகள்களையும் கால்வாயில் மூழ்கவைத்து தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதை கேட்ட பஞ்சாயத்து நிர்வாகம் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.