இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரையும் 2-0 என வென்றுள்ளது. இதையடுத்து, 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2வது போட்டியில், இந்திய அணியில் பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, சக இந்திய வீரரை திட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, போட்டியின் நடுவே தண்ணீர் கொண்டு வந்த வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியாவுக்கு தண்ணீர் கொடுக்க மறந்ததால் கெட்ட வார்த்தையால் திட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
FIFA உலக கோப்பையின் சிறந்த வீரர் யார்?? பரிந்துரையில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே!!
இதற்கு முன், ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணியை தலைமை தாங்கிய போதும் சக வீரர்களை திட்டி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், பிசிசிஐயானது, இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இவரை அழைத்து வார்னிங் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.