திருமணமான பெண்கள் தனது கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன் பெறவும் பிராத்தித்து கொண்டாடப்படுவது ஹரியாலி தீஜ்.
ஹரியாலி தீஜ் கொண்டாட்டம்..!
உலகில் உள்ள மக்கள் அனைவரும் 2020 – ஆம் ஆண்டு ஹரியாலி தீஜ் என்ற பருவமழைக் கால திருவிழாவை இன்று கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழா ஷ்ரவன் என்ற மாதத்தில், ஷுக்லா பக்ஷவின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் ஹரியாலி கஜாரி, ஹார்ட்டலிக்கா மற்றும் ஹரியாலி தீஜ் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
நன்னாளில் பிராத்தனை..!
ஹரியாலி தீஜ் என்ற நாளில், திருமணமான பெண்கள் தனது கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன் அமைய வேண்டும் என்றும் நம்பிக்கையின் பேரில் பிராத்திப்பர். மேலும் அந்நன்நாளில், சில வாழ்த்துக்கள் மற்றும் செய்திகளை தங்களது மனம் கவர்ந்தோருக்கு பகிர்வர்.
ரக்ஷா பந்தன் பரிசாக தண்ணீர் விநியோகத் திட்டம் – பிரதமர் மோடி!!
மனம் கவர்ந்தவருக்கு வாழ்த்து..!
உங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்ப, நாள் முழுவதும் புதிய அனுபவங்களை அடைய மற்றும் உங்களை சுற்ற நல்லெண்ணங்கள் பரவ வாழ்த்துகிறேன், கடவுள் சிவன் மற்றும் பார்வதி உங்களுக்கு உடல் பலம் மற்றும் செழிப்பு வழங்க வாழ்த்துக்கள், ஹரியாலி தீஜ் என்ற நன்னாளில் மகிழ்ச்சிப் பொங்க வாழ்த்துக்கள் என்று தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.