பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – கல்வித்துறை முடிவு!!

0

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் நிலவுவதால் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே காலாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்த போதிலும், அதற்கு பெற்றோர்கள் மற்றும் எதிர்கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு நிலவுவதால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஊரடங்கு காலத்தில் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல்கள் நிலவுவதால் கடந்த கல்வியாண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வியாண்டு தொடங்கி பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் மாணவர்களுக்கு ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் நடத்தப்படுகிறது.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் இது தான்!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் இன்னும் நடத்தப்படாத நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் காலாண்டு தேர்வுகளை நடத்தி உள்ளன. தற்போது அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார். தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் மாதிரி தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here