கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து:
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிபெண்கள் வழங்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் ஈரோட்டில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் தாங்கள் விருப்பப்பட்டால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தலாம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் மாணவர்களின் சுமையை குறைக்க 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைத்தும், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் 30% குறைத்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கூறினார்.
நான்கு கட்டங்களாக JEE மெயின் தேர்வு 2021 – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!!
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா நோய் தோற்று அதிகரித்து வருவதால் தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறக்காமல் இருப்பது நன்மைபயக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.