படுகொலை செய்யப்பட்ட ஹைட்டிய அதிபர்: மருத்துவமனையில் இருந்து மனைவி வெளியிட்ட உருக்கமான புகைப்படம்!!!

0

ஹைட்டிய நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் தன் வீட்டில் முன்பே படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த செய்தி உலகம் முழுக்க பரவி அனைவரையும் திடுக்கிட செய்தது. இந்நிலையில் இவரின் மனைவி மார்ட்டின் தான் மருத்துவனையில் இருக்கும் புகைப்படத்தை மிக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

53 வயதான ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது வீட்டில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்தார். இந்த தாக்குதலின் போது  ஜோவெனல் மொய்ஸ் அவர்களின் மனைவி மார்ட்டின் மோஸும் காயமடைந்தார் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில் மார்ட்டின் மோஸ், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் “என் கணவர் இறந்து விட்டார் என இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு கடவுள் தான் காரணம்” என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை இந்த பதிவிற்கு கீழ் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here