இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் தான். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர வெறும் 2 பொருட்கள் போதும். அந்த ஈஸியான டிப்ஸ் குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
முடி உதிர்தல் பிரச்னை
இன்று நம்மில் பலருக்கும் பிரச்சனை என்றால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனையாக தான் இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, உடல் சூடு, நாம் வேலை பார்க்கும் இட சூழல், முறையாக பராம்பரிக்காதது என்று எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.
‘என்ன கீர்த்தி இப்படி போக போக தேஞ்சுகிட்டே போறீங்க’ – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!
இதற்காக பலரும் நாடுவது ரசாயனங்கள் கலந்த ஷாம்ப்பூக்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களே ஆகும். ஆனால், அது தான் தவறானது. இயற்கையான முறையில் பராம்பரித்தால் தான் முடி என்றுமே உதிராது. அதற்கு பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது. வீட்டில் இருக்கும் இரு பொருட்களை வைத்து இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.
பேக் செய்யும் முறை
இதற்கு முதலில் காத்தலையை எடுத்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் அந்த ஜெல்லை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். உங்கள் முடியின் அளவினை பொறுத்து தேவையான அளவிற்கு எதிர் கொண்டு அத்துடன் வெங்காயம் சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் 2 எடுத்து அதனை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இதனை நன்றாக மிக்ஸிஸில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின்பு, அதனை வடிகட்டி ஒரு பஞ்சினை எடுத்து அதனை முடியில் தேய்க்க வேண்டும். முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விட்டு கொள்ளுங்கள். பின், ஒரு 15 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு முடியினை அலசுங்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று விடும்.