தற்போது மாறி வரும் பழக்க வழக்கத்தால் நம் கலாச்சாரத்தையே மறந்து வருகிறோம். ஸ்டைல் என்று கூறி தலை முடிக்கு நமக்கே தெரியாமல் பல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறோம். இதனால் முடி உதிர்வு பிரச்சனையும் தற்போது அதிகரித்துள்ளது. இப்பொழுது முடி உதிர்வு பிரச்னையை தடுக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
முடி உதிர்வை தடுக்க..
அந்த காலத்தில் இப்பொழுது உள்ளவாறு ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள். ஆனாலும் பெண்கள் அனைவரும் அடர்த்தியான முடிகளை பெற்றிருந்தனர். இதற்கு காரணம் வீட்டிலேயே அவர்கள் உபயோகித்த பழங்கால பொருட்கள் தான்.
ஆனால் இப்பொழுதோ நாம் கலாச்சாரம் என்று விளம்பரங்களில் காட்டப்படும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்தி தலை முடிகளை வலுவிழக்க செய்கிறோம். இதனால் முடிகளுக்கு ஊட்டம் இல்லாமல் அதிகமாக உதிர்கிறது. இப்பொழுது தலைமுடி உதிர்வை தடுக்க வீட்டிலேயே சிகைக்காய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி காண்போம்.
தேவையான பொருட்கள்
சிகைக்காய்
செம்பருத்தி பூ
பூலாங்கிழங்கு
எலுமிச்சை தோல்
கரிசிலாங்கண்ணி
பாசிப்பருப்பு
செய்முறை
சிகைக்காய், பூலாங்கிழங்கு, எலுமிச்சை தோல், செம்பருத்தி ஆகியவற்றை 2 நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். கரிசிலாங்கண்ணி இலையை நிழலில் காய வைக்க வேண்டும். இப்பொழுது மேலே குறிப்பிட்ட அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொண்டால் சிகைக்காய் தூள் தயார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை சாதம் வடித்த நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடிக்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வை தடுக்கும். மேலும் புதிய முடிகளை எளிதில் வளர செய்யும்.