தலைமுடி பிரச்சனை என்பது தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கும் ஏற்படுகிறது. முடி கொட்ட ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே கண்டு கொள்வதில்லை. அதனால் தான் இது பின்னாளில் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. எனவே முடி கொட்டுவதை கட்டுப்படுத்த என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என பார்க்கலாம் வாங்க.
முடி உதிர்தல்:
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம் மற்றும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ தலையில் தேய்ப்பது போன்றவையே. மேலும் தலைக்கு சரிவர எண்ணெய் தேய்க்காமல் இருப்பதாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. மார்கெட்டில் பல எண்ணெய்கள் விற்கின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நம் தலைமுடிக்கு என்ன எண்ணெய் செட் ஆகும் என்பது கூட தெரியாமல் பயன்படுத்துகிறோம். இதனால் தான் முடி வலுவிழந்து போகிறது. அந்த காலத்தில் வீட்டிலேயே சிகைக்காய் தயாரித்து தலைக்கு தேய்த்து குளித்தனர். மேலும் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் குளியலும் வழக்கமாகி இருந்தது.
ஆனால் தற்போது அதற்காக யாரும் நேரம் ஒதுக்குவதில்லை. மேலும் அதற்கான நேரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. உடலில் இரும்பு சத்து குறைபாடுகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படும். முடிந்த வரை முடி கொட்டுதல் பிரச்சனையை தடுக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து முடி வேர்ப்பகுதியில் மசாஜ் செய்து வரலாம்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், கருவேப்பிலை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். கருவேப்பிலை உடலில் இரும்பு சத்தை அதிகரிக்கும். எனவே தான் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும். கருவேப்பிலையை அரைத்து முடியின் வேர்வரை தடவவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.
கருவேப்பிலையை ஜூஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள். கருவேப்பிலை, சீரகம், தயிர், மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைத்து அதில் தண்ணீர் ஊற்றி ஜூஸ் ஆக குடித்து வந்தால் கசப்பு தெரியாது. மேலும் இதனால் இரும்பு சத்து அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாக முடி உதிர்வு பிரச்சனை குறையும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.