இலங்கையில் ஒரு நபர் பேஸ்புக்கில் வந்த ஒரு போஸ்டில் இருந்த ஜூஸ் போடும் விடியோவை பார்த்து அதை அப்படியே செய்து குடித்ததால் உயிர் இழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கஜ மாடரா மர இலை..!
ஸ்ரீலங்காவின் கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளார். மேலும் இவர் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பவர் என கூறப்படுகிறது. அதில் வந்த ஒரு போஸ்டில் கஜ மாடரா மரத்தின் இலையை பறித்து ஜூஸ் போட்டு குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என வந்து உள்ளது. அவரும் அதில் வந்த மாதிரியே ஜூஸ் போட்டு குடித்ததால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உள்ளார்.
பின்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |