இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 இந்த மாதம் ஜன. 17 இல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான பிரெஞ்ச் கயானாவில் இருந்து இதனை இஸ்ரோ ஏவ உள்ளது. மேலும் இந்த ஜிசாட் 30 செயற்கைகோள் 3450 கிலோ எடை கொண்டது.
இந்த செயற்கைகோள் இந்தியாவின் இணையதள வளர்ச்சியில் புரட்சிகரமாக அமையும் என கூறப்படுகிறது. இது கிராமப்புறங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.