
நவீன யுகத்திற்கு ஏற்ப மக்கள் அனைவரும் மெட்ரோ ரயில்களின் விரைவு வசதிகளை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் பயணத்திற்கு ஏற்றவாறு சென்னை மெட்ரோ ரயில் பயன்பாடு நேரங்களை மாற்றியமைக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன்மூலம் மெட்ரோ ரயில் விரைவு பயணங்களை மேற்கொண்ட மக்கள் தற்போது நாளுக்கு நாள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் விரிவாக்கம், பராமரிப்பு பணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பால் விலை உயர்வை நிறுத்த அரசு எடுத்த அதிரடி முடிவு.., புதிய திட்டத்தை அமல்படுத்திய அமைச்சர்!!!
இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் சென்னை மெட்ரோ வசதிகளை சுமார் 66 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.48 லட்சம் பேர் அதிகம் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் கூறியுள்ளனர்.